பல்லவி
ஸ்ரீ ராம 1ரகு4 ராம ஸ்1ரு2ங்கா3ர ராமயனி
2சிந்திம்ப ராதே3 ஓ மனஸா
சரணம்
சரணம் 1
தளுகு செக்குல முத்3து3 3பெட்ட கௌஸல்ய முனு
தபமேமி ஜேஸெனோ (கௌஸல்ய
தபமேமி ஜேஸெனோ) தெலிய (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ரகு4/ ராம/ ஸ்1ரு2ங்கா3ர/ ராம/-அனி/
'ஸ்ரீ ராமா/ ரகு/ ராமா/ சிங்கார/ ராமா/' யென/
சிந்திம்ப ராதே3/ ஓ மனஸா/
சிந்திக்கலாகாதா/ ஓ மனமே/
சரணம்
சரணம் 1
தளுகு/ செக்குல/ முத்3து3/ பெட்ட/ கௌஸல்ய/ முனு/
தளுக்கு/ கன்னங்களில்/ முத்தம்/ இட/ கௌசலை/ முன்பு/
தபமு/-ஏமி/ ஜேஸெனோ/ (கௌஸல்ய/
தவம்/ என்ன/ செய்தனளோ/ (கௌசலை/
தபமு/-ஏமி/ ஜேஸெனோ/) தெலிய/ (ஸ்ரீ)
தவம்/ என்ன/ செய்தனளோ/) யாரறிவர்/?
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சரணங்களில் 'முனு' என்னும் சொல் புத்தகங்களில் பலவிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
சரணங்களில் திருப்பப்பட்ட பகுதிகள் பலவிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
சரணங்களில் 'தெலிய' எனும் சொல் பலவிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவை யாவற்றிற்கும் திரு கோவிந்த ராவ் அவர்களின் 'The Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தினில் கொடுக்கப்பட்ட முறையையே இங்கு பின்பற்றப்பட்டுள்ளது.
1 - ரகு4 ராம - ஜய ராம.
2 - சிந்திம்ப - சிந்திஞ்ச.
3 - பெட்ட - பெட்டு : மற்ற சரணங்களில் கொடுத்துள்ளது போன்று ('பில்வ', 'ஸேய', 'உப்பொங்க', 'ஸோக', 'கன') இங்கும் 'பெட்ட' என்றிருக்கவேண்டும். எனினும், 'பெட்டு' சரியென்றால், 'தளுக்குக் கன்னங்களில் முத்தமிடும் கௌசலை தவமென்ன செய்தனளோ' என்று மொழிபெயர்க்கப்படும்.
4 - தனிவார - தனிதபர : 'தனிதபர' சரியெனப்படவில்லை.
5 - த4ர்மாத்ம - த4ர்மாத்மு.
6 - ஸி1வ - ஸி1வு.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - சிந்திம்ப ராதே3 - புத்தகங்களில், இதற்கு 'சிந்திக்கலாகாதா' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும், சரணங்களில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களை நோக்குகையில், 'தவங்கள் பல இயற்றினாலன்றி, வெறும் சிந்தப்பதால் மட்டும், அத்தகைய பேற்றினை அடையமுடியாது' என தியாகராஜர் கூறுவதாகத் தோன்றுகின்றது. எனவே, இதற்கு 'உணர்ந்து பார்க்கவியலாதே' என பொருள் பொருந்தும் எனத் தோன்றுகின்றது. ஆயினும், பரம்பரையாகக் கொள்ளப்பட்ட 'சிந்திக்கலாகாதா' என்ற பொருளே இங்கும் ஏற்கப்பட்டது.
4 - தனிவார - தெலுங்கு அகராதியின்படி, 'தனிவி தீர' என்பது சரியான சொல்லாகும். ஆயினும், 'ஆர' மற்றும் 'தீர' என்ற சொற்களுக்குக் கிட்டத்தட்ட ஒரே பொருளாகும்.
7 - த்யாக3ராஜாப்த - சில புத்தகங்களில் 'தியாகராஜ' என்ற சொல் சிவனைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அது சரியெனப்படவில்லை.
கௌசிகன் - விசுவாமித்திர முனி
Top